Tuesday, December 21, 2010

அட மக்கு பையா



ஏண்டா இப்ப எல்லாம் என்னை
கொஞ்சுறதே இல்லை என்றாய் நீ
கொஞ்ச வந்தா நீ தானே வேணாம்னு
சொல்லி தள்ளி விடுற என்றேன் நான்
அட மக்கு பையா வேணாம்னு சொன்னா
வேணும்னு அர்த்தம்டா என்றாய் நீ

Tuesday, December 7, 2010

தேவதையால் ஆசிர்வதிக்கப்பட்டவன்


நான் தினமும் காலையில் எழும்போதே
தேவதையால் ஆசிர்வதிக்கப்படுகிறேன் என்றேன் நான்,
ஏன் அப்படி சொல்லுற என்றாய் நீ,
நீதானே தினமும் காலையில் என்
நெற்றியில் முத்தமிட்டு என்னை
எழுப்புகிறாய் என்றேன் நான்




நான் தினமும் காலையில் தேவதையால்


ஆசிர்வதிக்கப் படுகிறேன் என்றேன் நான்


எப்படி சொலுற endraai nee


அடி என் செல்லமே


இனிமேல் என் மடியில் படுக்காத என்றாய் நீ,
அதிர்ந்து போனவனாய் ஏன் என்று கேட்டேன்,
எப்பவும் நீயே என் மடியில் படுத்துகிட்டா
நான் எப்பதான் உன் மடியில் படுக்கறது என்றாய் நீ...

Thursday, October 14, 2010

உன்னை இன்று எல்லா இடத்திலும் தேடினேன் உன்னை காணோமே என்றாய்,உன் இதயத்தில் தேடி பார்த்தியா என்றேன்,என் இதயம் உன்னிடம் தானேடா இருக்கு அங்க எப்டி தேட முடியும் என்றாய் நீ

Tuesday, September 14, 2010

இவ்ளோ நேரமாடா கைய பிடிக்க


ஒரு மழைகாலத்து மாலை நேரம்,
மெல்லிய சாரலில் நனைந்தபடி சென்றுகொண்டிருந்தோம்,
நனைந்த ஓவியமாய் அருகில் நீ,
தடுமாறிய உன் கையை பிடித்தேன்,
தத்தி
இவ்ளோ நேரமாடா
கைய
பிடிக்க என்றாய் நீ

நீ சரியான முட்டாள்டா


எனக்கு சேலை கட்ட தெரியாது
நீ தான் கட்டிவிடணும்னு சொன்ன,
ஆனா நீயே கட்டிகிட்ட என்றேன் நான்,
தெரியாதுன்னு சொன்னா நீ கட்டி விடுவாய்
என்று நினைத்தேன்,தெரியாதுனு சொல்லிட்ட,
நீ சரியான முட்டாள்டா என்றாய் நீ.

Wednesday, August 25, 2010

என் அப்பாவி செல்லமே


என் உடைகளிலேயே உனக்கு எந்த
உடை
ரொம்ப பிடிக்கும் என்றாய் நீ,
உன் பிறந்தநாள் உடை என்றேன் நான்,
எந்த பிறந்தநாள் உடை
என்றாய் அப்பாவியாய் நீ?


ஏனடி வஞ்சிக்கிறாய்?


தலை சாய்க்க தலையணை கேட்டால் மடி தருகிறாய்,
சாய்வதற்கு இருக்கை கேட்டால் தோள் தருகிறாய்,
உண்பதற்கு கேட்டால் மட்டும் உணவையே தருகிறாய்,
இதழ்களை தராமல் ஏனடி வஞ்சிக்கிறாய்?


Sunday, June 27, 2010

அப்பதானே என்னை கட்டிபிடிக்குற


ஏண்டா எப்பவுமே என்னை திகில்
படத்துக்கே கூட்டிட்டு போற என்றாய்,
அப்பதானே
பயம் தெரியாம இருக்க
என்னை கட்டிபிடிக்குற என்றேன் நான்.

Wednesday, June 16, 2010

நிலாவைத்தான் பார்க்கிறேன் நான்


அதிகாலையில் துயில் கலைந்து எழுந்தேன்
கலைந்த ஓவியமாய் அருகில் நீ,
உன்னை ரசித்து கொண்டிருந்த என்னிடம்
காலையில் சூரியனை தாண்டா
பார்க்கணும் என்றாய் நீ,
நிலாவைத்தான் பார்க்கிறேன் என்றேன் நான்.

காதலாகி.....


காதலில் சொல்லுவதை விட செய்வதுதான்
சிறந்தது என்றேன் நான்,
எப்படி என்றாய் நீ?
உன்னை கட்டிபிடிக்கனும்னு சொல்லுவதை
விட உன்னை கட்டிபிடிக்கறதுதானே
நல்லா இருக்கும் என்றேன் நான்

Wednesday, June 9, 2010

என் செல்ல குழந்தை


என்னை குழந்தைன்னு சொல்லாத
நான் பெரியவ என்கிறாய்,ஆனால்
உன்னை அணைக்காமல் நம் குழந்தையை
கொஞ்சினாலோ
என்னை யார் கொஞ்சுவா என்கிறாய்?
பின் உன்னை குழந்தை என்று சொல்லமால்
என்னவென்று
சொல்வது என் செல்ல குழந்தையே

Monday, June 7, 2010

கொஞ்சிட்டே இருக்கலாம்


ஊருக்கு ரெண்டு நாள் போயிட்டு வரேன்னு சொன்னா
ஒரு வாரம் கழிச்சு வர சொல்லுற,
நான் இல்லைனா உனக்கு சந்தோஷமா என்றாய்?
நீ பக்கத்துல இல்லைனா உன்னை
எப்படி எல்லாம் கொஞ்சலாம்னு யோசிப்பேன்,
நீ வந்ததும் கொஞ்சலாம்ல
அதுக்குதான் என்றேன் நான்.

Friday, June 4, 2010

மழை பெய்து முடித்த மாலை நேரம்


முத்தம் தான் எனக்கு பிடிக்கும்


பிறந்தநாளுக்கு ரொம்ப பிடிச்சத தாடானு கேட்டா
முத்தமா கொடுக்குற பொறுக்கி என்றாய்
முத்தம்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்
என்றேன் நான்

என்மேல் உன்வாசம்



என் துண்டுலையே ஏண்டா நீயும் துடைக்குற என்றாய்,
அதுல உன்வாசம் இருக்கே அதான் என்றேன் நான்.

நீ என்னை கட்டிக்கறது தான் பிடிக்கும்


நான் சேலை கட்டுவது பிடிக்குமா
இல்லை தாவணி கட்டுவது பிடிக்குமா என்றாய்?
நீ என்னை கட்டிக்கறது தான்
பிடிக்கும் என்றேன் நான்.

நீ என்னை கட்டிகறது தான் பிடிக்கும்

நான் சேலை கட்டறது பிடிக்குமா
இல்லை தாவணி கட்டறது

உன் அணைப்பில் நான் இருப்பேன்.


இந்த உலகத்துலேயே உனக்கு ரொம்ப பிடிச்ச
இடம் எது என்றேன் நான்
உன் கை அணைப்பில் நான் இருக்கும்
இடம் தான் என்றாய் நீ.

இறுக்க அணைச்சு.............


நீ தானே என்னை கட்டி பிடிக்க சொன்ன
ஏண்டா இப்ப தள்ளி விடுற என்றாய்
அப்ப தானே நீ இன்னும் இறுக்கமா
கட்டி பிடிப்ப என்றேன் நான்.

Tuesday, May 25, 2010

உன் அணைப்பே சுகம்


மாலை வேளையில் கடற்கரையில் நடக்கறது
ரொம்ப சுகமா இருக்குல என்றேன் நான்
ஆமா நீ என்னை அணைச்சுக்கிட்டு நடந்தா
இன்னும் சுகம் என்றாய் நீ

ரோஜாவை கட்டி பிடிச்சுகுறேன்


குளித்துவிட்டு வந்த உன் கூந்தலிலிருந்து
சொட்டிய நீர் உன்னை பனியில்
குளித்த ரோஜாவா காட்டுது என்றேன்,
பக்கத்துல வராத முள்ளு குத்திரும் என்றாய் கிண்டலாய்,
முள் தைத்தால் என்ன,ரோஜாவை
அணைத்துக் கொள்ளலாமே என்றேன் நான்.

Monday, May 24, 2010

அழகை ரசிக்கிறேன்


சமைக்க கற்றுக்கொள்கிறேன் என்று உன்னிடம்
அடம் பிடித்து சமயலறைக்கு வந்தேன்,
நீ சமைக்கும் அழகில் மயங்கி நின்றேன்
சமைக்க கத்துகுறேன்னு சொன்ன என்றாய்
அழகை ரசிக்க கற்றுகொண்டிருக்கிறேன் என்றேன் நான்.

Wednesday, May 19, 2010

பனியில் குளித்த ரோஜா


பனியில் குளித்த ரோஜாவை என்னிடம் காட்டி
எவ்வளவு அழகு இல்லை என்றாய்,
ஆம் ஒரு ரோஜா இன்னொரு ரோஜாவை
வைத்திருப்பது அழகுதான் என்றேன் நான்.

உன்னருகே நானிருந்தால்


எனக்கு இடி சத்தம் கேட்டால் பயம்,
பக்கத்துல இருக்குறவங்கள கட்டி பிடிச்சுப்பேன்
நீ என்ன பண்ணுவ என்றாய்?
உன் அருகில் வந்து நின்று
கொள்வேன் என்றேன் நான்.

Monday, May 17, 2010

உன்னை பார்க்க பிடிக்கும்


எனக்கு மொட்டை மாடியில் படுத்துக்கிட்டு நிலாவை
பார்க்க பிடிக்கும், உனக்கு என்றாய்
உன் மடியில் படுத்துக்கிட்டு உன் முகத்தை
பார்க்க பிடிக்கும் என்றேன் நான்

Friday, May 14, 2010

சுவாசிப்பதற்கு சலிக்குமா என்ன?

எப்பவுமே என்னை கொஞ்சிகிட்டே இருக்கியே
சலிப்பு தட்டிறாதா உனக்கு என்னை என்றாய்
சுவாசிக்க சலிப்பு தட்டுமா என்ன?

ஏண்டா கட்டிபிடிச்ச?

உன்னை எவ்வளவு பிடிக்கும்னு காட்றதுக்கு கைய விரித்தால்
ஏண்டா என்னை கட்டிபிடிச்ச என்றாய்?
அது நீ உன்னை அணைக்க விடுத்த அழைப்பு
என்றல்லவா நினைத்தேன் என்றேன் நான்.

Thursday, May 13, 2010

ஏண்டா வெட்கப்பட வைக்குற?

ஏண்டா என்னை சும்மா சும்மா
வெட்கப்பட வைக்குற என்றாய்
அப்பதானே நீ உன் வெட்கத்தை
மறைக்க என்னை கட்டிபிடிக்குற என்றேன் நான்

Wednesday, May 12, 2010

உன்னை கொஞ்ச பிடிக்கும்

என்னை கட்டி பிடிக்க உனக்கு பிடிக்குமா
இல்லை கொஞ்சுவதற்கு பிடிக்குமா என்றாய்
கட்டி பிடிச்சுகிட்டே கொஞ்ச பிடிக்கும் என்றேன் நான்.

வெட்கத்தின் நிறம்

உனக்கு ஏன்டா எப்பவும் ரோஜாப்பூ
மட்டும் பிடிக்குது என்றாய்
அத பார்க்குறப்ப எல்லாம் உன் வெட்கம்
ஞாபகம் வருதே அதான் என்றேன் நான்.

சொக்க வைக்கிறியேடா


தேவதை உன் பிறந்தநாள் நான்
அசந்து போற மாதிரி ஒரு பரிசு கொடு மாம்ஸ் என்றாய்
இதழ் முத்தம் தந்தேன் நான்
அசந்து போற மாதிரி கேட்டா
கிறங்கி போற மாதிரி குடுத்துட்டியே மாம்ஸ் என்றாய்

மூடு மந்திரம்

நான் உன்னிடம் எதையும் மறைத்ததில்லை
ஆனால் நீ அப்படி இல்லை என்றேன்
அதிர்ந்துபோன நீ எதை மறைத்தேன் உன்னிடம் என்றாய்
பார் உன் சேலை இடைவெளியில்
தெரியும் இடுப்பை கூட மூடுகிறாய் என்றேன் நான்

Tuesday, May 11, 2010

குளிர் விட்டு போச்சு

மழையில் நனைந்து வந்த எனக்கு தலை துவட்டிவிட்டாய் ,
அருகில் பார்த்த உன்னை இழுத்து அணைத்தேன்,
என்னடா குளிருதா என்றாய்,இல்லை
குளிர் விட்டு போச்சு என்றேன் நான்.

Monday, May 10, 2010

வெட்கச்சிணுங்கி

தொட்டா சிணுங்கி செடிய தொட்டா ஏன் சுருங்குது என்றாய்,
வெட்கத்துனாலதான் என்றேன் நான்,
அது எப்படி என்றாய்?
இப்படிதான் என்று உன்னை தொட்டேன் நான்.

எனக்கு பிடிச்ச ஸ்வீட்

எனக்கு ரொம்ப பிடிச்ச ஸ்வீட் லட்டு,
உனக்கு என்றாய் உன் இதழ்கள் என்றேன் நான்.