ஏண்டா எப்பவுமே என்னை திகில்
படத்துக்கே கூட்டிட்டு போற என்றாய்,
அப்பதானே பயம் தெரியாம இருக்க
என்னை கட்டிபிடிக்குற என்றேன் நான்.
அதிகாலையில் துயில் கலைந்து எழுந்தேன்கலைந்த ஓவியமாய் அருகில் நீ,உன்னை ரசித்து கொண்டிருந்த என்னிடம்காலையில் சூரியனை தாண்டாபார்க்கணும் என்றாய் நீ,நிலாவைத்தான் பார்க்கிறேன் என்றேன் நான்.
காதலில் சொல்லுவதை விட செய்வதுதான்சிறந்தது என்றேன் நான்,எப்படி என்றாய் நீ?உன்னை கட்டிபிடிக்கனும்னு சொல்லுவதைவிட உன்னை கட்டிபிடிக்கறதுதானேநல்லா இருக்கும் என்றேன் நான்
என்னை குழந்தைன்னு சொல்லாத நான் பெரியவ என்கிறாய்,ஆனால் உன்னை அணைக்காமல் நம் குழந்தையை
கொஞ்சினாலோ என்னை யார் கொஞ்சுவா என்கிறாய்? பின் உன்னை குழந்தை என்று சொல்லமால்
என்னவென்று சொல்வது என் செல்ல குழந்தையே
ஊருக்கு ரெண்டு நாள் போயிட்டு வரேன்னு சொன்னா
ஒரு வாரம் கழிச்சு வர சொல்லுற,
நான் இல்லைனா உனக்கு சந்தோஷமா என்றாய்?
நீ பக்கத்துல இல்லைனா உன்னை
எப்படி எல்லாம் கொஞ்சலாம்னு யோசிப்பேன்,
நீ வந்ததும் கொஞ்சலாம்ல
அதுக்குதான் என்றேன் நான்.
மழை பெய்து முடித்த மாலை நேரம்
பிறந்தநாளுக்கு ரொம்ப பிடிச்சத தாடானு கேட்டாமுத்தமா கொடுக்குற பொறுக்கி என்றாய்முத்தம்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்
என்றேன் நான்
என் துண்டுலையே ஏண்டா நீயும் துடைக்குற என்றாய்,அதுல உன்வாசம் இருக்கே அதான் என்றேன் நான்.
நான் சேலை கட்டுவது பிடிக்குமாஇல்லை தாவணி கட்டுவது பிடிக்குமா என்றாய்?நீ என்னை கட்டிக்கறது தான்பிடிக்கும் என்றேன் நான்.
நான் சேலை கட்டறது பிடிக்குமாஇல்லை தாவணி கட்டறது
இந்த உலகத்துலேயே உனக்கு ரொம்ப பிடிச்சஇடம் எது என்றேன் நான்உன் கை அணைப்பில் நான் இருக்கும்இடம் தான் என்றாய் நீ.
நீ தானே என்னை கட்டி பிடிக்க சொன்னஏண்டா இப்ப தள்ளி விடுற என்றாய்அப்ப தானே நீ இன்னும் இறுக்கமாகட்டி பிடிப்ப என்றேன் நான்.