நான்தான் சேலை நிறைய தடவை
கட்டி இருக்கேனே நீ பார்த்தது
இல்லைன்னு சொல்லுற என்றாய் நீ, உன்னை சேலைல பார்த்து இருக்கேன்
ஆனா நீ சேலை கட்டுவதை தான்பார்த்தது இல்லை என்றேன் நான்
எனக்கு எதுக்குடா இவ்வளவு பூ என்றாய் நீ.
உனக்கு கொடுப்பதற்காக பறிக்கிறேன் என்று
தெரிந்ததும் எல்லா பூக்களும்
என்னை பறித்துக்கொள் பறித்துக்கொள்
என்று சொல்லுகிறதே நான் என்ன
செய்வது என்றேன் நான்
என்னடா இந்த உடையில தேவதைமாதிரிஇருக்கேனா என்றாய் நீ,இல்லை தேவதை தான் உன்னைமாதிரி இருக்கு என்றேன் நான்